சூர்யாவை நீக்கிவிட்டு மீண்டும் விஜய்யையே ஒப்பந்தம் செய்துவிட்டது ஜெமினி லேப் நிறுவனம். ஷங்கர் இயக்கும் த்ரி இடியட்ஸ் படத்திற்கு மூவர் என்று பெயர் வைத்தாலும், இந்த மூவரையும் இணைத்து படப்பிடிப்புக்கு போவதற்குள் நாக்கு தள்ளி விட்டது ஷங்கருக்கு.
சூர்யாவின் சம்பள கெடுபிடி ஒருபுறம் இருந்தாலும், அவரது உறவினர் ஞானவேல் ராஜாவின் கீரின் ஸ்டியோவின் சார்பாக இந்த படத்தை தயாரிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தாராம் சூர்யா. தெலுங்கு பட வியாபாரத்தில் பாதி பங்கு லாபத்தையும் அவர் சம்பளமாக கேட்க வெலவெலத்து போனார்களாம் ஜெமினி நிறுவனத்தினர். அதுமட்டுமல்ல, படத்தில் மற்றொரு வேடத்தில் நடிக்கவிருக்கும் ஸ்ரீகாந்த்தையும் நீக்க வேண்டும் என்பது சூர்யாவின் நிபந்தனைகளில் ஒன்று. நான் ஒன்றும் புது டைரக்டர் அல்ல, சூர்யா சொல்வதையெல்லாம் கேட்பதற்கு. அவர் வேண்டாம்.
மீண்டும் விஜய்யிடமே போவோம் என்றாராம் ஷங்கர். பிப்ரவரி இறுதியிலிருந்து விஜய் கலந்து கொள்கிறார் மூவர் படப்பிடிப்பில்.
No comments:
Post a Comment