இளைய தளபதி விஜய் இந்தவருடம் ஜூன் மாதம் 22 ம் திகதி தனது 37 வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். தனது வேலாயுதம் படத்தை தனது பிறந்த நாளன்று வெளியிடத்திட்டமிட்டுள்ளார் . இது தனது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பதாலேயே விஜய் இந்த முடிவை எடுக்க முக்கிய காரணமாகும். வேலாயுதம் படத்தை தனது பிறந்தநாளுக்கு வெளியிடும் நோக்கில் பரபரப்பாக படப்பிடிப்பு மற்றும் ஏனைய நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
இத்துடன் தனது அடுத்த படமான நண்பனிலும் மும்முரமாக நடித்து வருகிறார்.விஜயின் வேலாயுதம் படத்தின் ஒரு பாடல் காட்சியும் ஒரு சண்டைக்காட்சியும் படமாக்கப்பட வேண்டியுள்ள நிலையில் சண்டைக்காட்சி சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் ஆடியோ மற்றும் ஏனைய வேலைகளும் மிகவும் வேகமாக இடம்பெறுகிறது.
விஜயினது நீண்ட நாள் ஆசை சங்கர் மற்றும் மணிரத்தினம் படத்தில் நடிக்க வேண்டும் என்பதாகும் .அதுவும் இப்பொழுது நடக்க போகின்றது. சங்கர் தனது முதல்வன் படத்தில் முதன் முதல் நடிக்க அணுகியது விஜயை ஆகும்.சங்கரின் நண்பனில் நடிக்கும் விஜய் அடுத்து மணிரத்தினத்தின் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.மணிரத்தினத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வனில் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார் விஜய்.ஆனால் இப்படம் தயாரிப்பு செலவு அதிகத்தினால் கைவிடப்பட்டது.ஆயினும் இயக்குனர் மணிரத்தினம் விஜய் கொடுத்த கால்சீட்டை பயன்படுத்தி புதிய படத்தை எடுக்க உள்ளார்.இது ஒரு கமர்ஷியல் படமாக உருவாக உள்ளது.மணிரத்தினம் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.இப்படம் 25 கோடி செலவில் உருவாக உள்ளது.இப்படத்தின் உத்தியோக பூர்வ அறிவுப்பு மற்றும் படத்தலைப்பு ஏனைய நடிகர் விபரம் என்பன விஜயின் பிறந்த நாளன்று வெளியிடப்பட உள்ளன. இந்த வருட விஜயின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் இரண்டு நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம்.
No comments:
Post a Comment