சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்த நடிகர் விஜய்க்கு சென்ற இடத்தில் சிறப்பான வரவேற்பு. ஆங்கில-சீன மொழி சப் டைட்டிலுடன் காவலன் திரைப்படத்தை அங்கு திரையிட்டார்களாம். ஒவ்வொரு காட்சியையும் விழுந்து விழுந்து
சிரித்தபடி ரசித்தவர்கள் கடைசி இருபது நிமிட காட்சியை பார்த்து கண்கலங்கினார்களாம்.
சிரித்தபடி ரசித்தவர்கள் கடைசி இருபது நிமிட காட்சியை பார்த்து கண்கலங்கினார்களாம். படம் முடிந்ததும் ரசிகர்கள் மத்தியில் விஜய் பேசினார். அப்போது கூறியதாவது-
வெளிநாடுகளில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வது இதுதான் முதல்முறை. ஷாங்காய் பட விழாவில் கலந்து கொண்டது முற்றிலும் எனக்கு புது அனுபவம். நடிகர், மொழி, தேசம் இவற்றை கடந்து ஒரு நல்ல படம் எந்த நாட்டு மக்களையும் கவரும் என்பதற்கு இது சிறந்த உதாரணம். படம் பார்த்து முடித்தவுடன் என் கேரக்டரான பூமி என்ற பெயரை சொல்லி அவர்கள் என்னை பாராட்டியது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது. மொத்தத்தில் இது என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்.
உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானுக்கு இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம். நான் படிக்கும்போது அவருடைய படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். இன்று அவரது ஊரில், நான் நடித்த காவலன் திரையிடப்பட்டது பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இங்குள்ள ரசிகர்களை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்.
இவ்வாறு மனம் திறந்து பேசிய விஜய், வரும் 15 ந் தேதி இந்தியா திரும்புகிறார்.

No comments:
Post a Comment