முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கும் விஜய், அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் நடிப்பதும் உறுதியாகி இருக்கிறது. இது ஒரு ஆக்ஷன் த்ரில்லர் என்பதுதான் விஷேசம். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான், தாமரை காபினேஷனில் பாடல்கள் உருவாகின்றன. படத்தை தமது போட்டோன் கதாஸ் நிறுவனம் சார்பில் கௌதம் வாசுதேவ் மேனனே தயாரிக்கிறார்.
அஜித்திற்கு என்று தயார் செய்யப்பட்ட 'துப்பறியும் ஆனந்த்' கதையினை விஜய்க்கு ஏற்றவாறு சிறு மாற்றம் செய்து இருக்கிறாராம் கௌதம். படத்தின் தலைப்பை ‘யோஹன் : அத்தியாயம் ஒன்று’ என மாற்றி உள்ளார் கௌதம். அஜீத்திடம் கால்ஷீட் கேட்டு கௌதம் காத்துக்கிடந்ததும், பின் சில உரசல்களுடன் இனி அஜீத்துக்காக நான் காத்திருக்க முடியாது என்றும் கௌதம் சொல்லியிருந்தார். இப்போது அஜீத்துக்கான கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு விஜய் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த 2012யில் துவங்குகிறது.
அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸூடன் இணைந்து எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக 'உதயன்' பட நாயகி ப்ரணிதா ஒப்பந்தம் செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
அஜித்திற்கு என்று தயார் செய்யப்பட்ட 'துப்பறியும் ஆனந்த்' கதையினை விஜய்க்கு ஏற்றவாறு சிறு மாற்றம் செய்து இருக்கிறாராம் கௌதம். படத்தின் தலைப்பை ‘யோஹன் : அத்தியாயம் ஒன்று’ என மாற்றி உள்ளார் கௌதம். அஜீத்திடம் கால்ஷீட் கேட்டு கௌதம் காத்துக்கிடந்ததும், பின் சில உரசல்களுடன் இனி அஜீத்துக்காக நான் காத்திருக்க முடியாது என்றும் கௌதம் சொல்லியிருந்தார். இப்போது அஜீத்துக்கான கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு விஜய் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த 2012யில் துவங்குகிறது.
அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸூடன் இணைந்து எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக 'உதயன்' பட நாயகி ப்ரணிதா ஒப்பந்தம் செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
No comments:
Post a Comment