விஜய் பட சூட்டிங்கில் திடீரென ஒரு கும்பல் புகுந்து ரகளையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சூட்டிங்கிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடித்து வரும் புதிய படம் "நண்பன்". இந்தியில் "3-இடியட்ஸ்" என்ற பெயரில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம்தான் இது. இப்படத்தின் சூட்டிங் சென்னையில் உள்ள ஒரு கல்லூரி வளாகத்தில் நடந்து வருகிறது.
சம்பவத்தன்று அந்த கல்லூரிக்குள் சுமார் 200 பேர் திடீரென புகுந்தனர். ஏற்கனவே ராஜபக்சேவுக்கு எதிராக நடந்த கையெழுத்து வேட்டையில் கையெழுத்திட மறுத்த சர்ச்சையில் நடிகர் விஜய் சிக்கியிருப்பதால், அந்த கும்பலை படக்குழுவினர் உள்ளே அனுமதிக்கவில்லை. பின்னர் அவர்கள், தாங்கள் மாணவர்கள், நடிகர்களை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் வந்திருப்பதாகவும் கூறி அனுமதி கேட்டனர். இதையடுத்து நடிகர்களை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களும் நடிகர்கள் விஜய், ஜீவா ஆகியோருக்கு கைகுலுக்கினார்கள். அதைத்தொடர்ந்து மாணவர்களை வெளியே செல்லும்படி படப்பிடிப்புக் குழுவினர் கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து வெளியேறாமல் சூட்டிங்கை வேடிக்கை பார்க்க நின்றனர்.
இதனால் கோபமடைந்த படக்குழு, மாணவர்களை வெளியே செல்லும்படி மீண்டும் கேட்டுக் கொண்டனர். இதையடுத்துதான் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். சூட்டிங்கை பார்க்க விடாததால் ஆத்திரமடைந்த அவர்கள், அரங்குகளை சேதப்படுத்தி ரகளை செய்தனர். கேரவன் கண்ணாடிகளையும் உடைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த கும்பலை வெளியேற்றினார்கள். இந்த சம்பவத்துக்கு பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நண்பன் பட சூட்டிங் நடந்தது.
சம்பவத்தன்று அந்த கல்லூரிக்குள் சுமார் 200 பேர் திடீரென புகுந்தனர். ஏற்கனவே ராஜபக்சேவுக்கு எதிராக நடந்த கையெழுத்து வேட்டையில் கையெழுத்திட மறுத்த சர்ச்சையில் நடிகர் விஜய் சிக்கியிருப்பதால், அந்த கும்பலை படக்குழுவினர் உள்ளே அனுமதிக்கவில்லை. பின்னர் அவர்கள், தாங்கள் மாணவர்கள், நடிகர்களை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் வந்திருப்பதாகவும் கூறி அனுமதி கேட்டனர். இதையடுத்து நடிகர்களை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களும் நடிகர்கள் விஜய், ஜீவா ஆகியோருக்கு கைகுலுக்கினார்கள். அதைத்தொடர்ந்து மாணவர்களை வெளியே செல்லும்படி படப்பிடிப்புக் குழுவினர் கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து வெளியேறாமல் சூட்டிங்கை வேடிக்கை பார்க்க நின்றனர்.
இதனால் கோபமடைந்த படக்குழு, மாணவர்களை வெளியே செல்லும்படி மீண்டும் கேட்டுக் கொண்டனர். இதையடுத்துதான் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். சூட்டிங்கை பார்க்க விடாததால் ஆத்திரமடைந்த அவர்கள், அரங்குகளை சேதப்படுத்தி ரகளை செய்தனர். கேரவன் கண்ணாடிகளையும் உடைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த கும்பலை வெளியேற்றினார்கள். இந்த சம்பவத்துக்கு பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நண்பன் பட சூட்டிங் நடந்தது.
No comments:
Post a Comment