கோபம் என்னாச்சு? மவுனம் காக்கும் சீமான் - விஜய்!! - IlayaThalapathy Vijay

IlayaThalapathy Vijay

Vijay (born 22 June 1974) is an Indian actor, playback singer and producer, who works in the Tamil film industry. Son of film director and producer S. A. Chandrasekhar, he started his career as a child actor in the movie Vetri and later made his debut as a lead actor in the 1992 film Naalaya Theerpu.

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, July 5, 2011

கோபம் என்னாச்சு? மவுனம் காக்கும் சீமான் - விஜய்!!

whether seeman vijay joints for pagalavan
டைரக்டர் சீமான் அரசியல் களத்தில் பிஸியாக இருந்தாலும், விஜய்க்காக ஒரு கதையை உருவாக்கியதும், அந்த படத்திற்கு பகலவன் என்று பெயரிட்டதும், பின்னர் டைட்டிலை கோபம் என மாற்றியதும் பழைய சங்கதி. அதேபோல் பொடா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நேரத்திலும் கோபத்துக்காக ஸ்கிரிப்ட் எழுதியதாக சிறையில் இருந்து வெளியே வந்த சீமானே தெரிவித்தார். அதன் பின்னர் சீமான் & விஜய் சந்திப்பின்போது ஸ்கிரிப்ட்டில் சிலபல மாற்றங்களை செய்யும்படி விஜய் கேட்டுக் கொண்டார். அதன்படி ஸ்கிரிப்டை மாற்றுவதற்குள், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்து விட்டது.

எனவே புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அரசுக்கு ஏற்ப சில டயலாக்களை மாற்றும்படி சீமானிடம் விஜய் கேட்டிருக்கிறார். சீமானும் ஆளும்கட்சிக்கு ஆதரவான சில வசனங்களை தயார் செய்து கொண்டிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் கோபம் ஆன பகவலன் ட்ராப் ஆகி விட்டதாக புதிய செய்தியன்று வெளியாகியிருக்கிறது. இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டிய சீமானும், விஜய்யும் தொடர்ந்து மவுனம் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கோபத்தைக் காண காத்திருக்கும் ரசிகர்களோ இப்போது கோபத்தில் இருக்கிறார்கள்.

No comments:

Post Top Ad

Responsive Ads Here