சொல்ல சொல்ல பழி, தோண்ட தோண்ட குழி என்கிற அடாவடி மொழியை அற்புதமாக பின்பற்றுகிற ஒரே இடம் கோடம்பாக்கம்தான். அதற்கு லேட்டஸ்ட் உதாரணம்தான் நாம் இப்போது சொல்லப் போகிற தகவல்.
விஜய்யும் கவுதம் மேனனும் இணைந்து உருவாக்கவிருக்கும் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தை கவுதம் மேனனே தயாரிக்கிறார். இதில் பேரதிர்ச்சி அடைந்திருக்கிறாராம் பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். விஜய் நடித்த குஷி, கில்லி, ஆகிய படங்களை தயாரித்தவர் இவர்தான். திடீரென்று ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் பட தயாரிப்பிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர், கலெக்ஷன் ஹீரோ விஜய்யின் கால்ஷீட் கிடைத்தால் தனது பிரச்சனைகளில் இருந்து தப்பித்துவிடலாம் என்று நினைத்திருந்தார். இதற்காக எஸ்.ஏ.சந்திரசேகரையும், விஜய்யையும் தொடர்ந்து சந்தித்தபடி இருந்தார்.
சரி, யாரையாவது கதை சொல்ல அனுப்புங்க. பிடிச்சிருந்தா கால்ஷீட் என்றாராம் விஜய். அதற்கப்புறம்தான் கவுதம் மேனனை விஜய்யிடம் அழைத்துச் சென்றார் ஏ.எம். ரத்னம். இருவருக்கும் ஏற்கனவே அறிமுகம் இருந்தாலும், மீண்டும் அதை புதுப்பித்தவர் ரத்னம்தான். அப்புறம் ஒருநாள் கவுதமுக்கு விருந்தும் அளித்தார் விஜய். இந்த இடைபட்ட காலத்தில் ஏ.எம்.ரத்னத்தை மறந்தே போனார் கவுதம்மேனன்.
இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கட்டும் என்று விஜய் சொல்ல, நானே தயாரிக்கிறேன் என்று கவுதம் கேட்க, என்ன மாயம் நடந்ததோ, வெற்றி கவுதமுக்குதான்! நம்பி பேச விட்டேன். இப்படி நட்டாத்துல தள்ளிட்டாரே என்று புலம்பி வருகிறாராம் ஏ.எம்.ரத்னம்.
No comments:
Post a Comment