அண்ணா ஹஜாரேவுடன் நடிகர் விஜய் நாளை (வியாழக்கிழமை) ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ளார்.
வலுவான லோக்பால் மசோதா கோரும் அண்ணா ஹஜாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் விஜய் நேரடியாகவே போராட்டத்தில் பங்குபெறுவது என முடிவு செய்துள்ளார்.
சென்னையில் இருந்து நாளை காலை 6.30 மணியளவில் டெல்லி புறப்படும் அவர், ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் அண்ணா ஹஜாரேவை சந்திக்கவுள்ளார்.
அத்துடன், ராம்லீலாவில் ஒரு நாள் உண்ணாவிரதத்தை மேற்கொள்ளவும் அவர் தீர்மானித்துள்ளார்.
சென்னையில் இருந்து தனியாக செல்லும் அவருடன், டெல்லியில் அவரது ரசிகர்கள் இணைந்துகொள்வார்கள்.
தனது ரசிகர்கள் மற்றும் தன்னுடைய மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து ராம்லீலா மைதானம் செல்ல அவர் திட்டமிட்டுள்ளார்.
அண்ணா ஹஜாரேவுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் ஒருநாள் உண்ணாவிரதத்தில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார்.
இந்த நிலையில், தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர் ஒருவர் டெல்லியில் அண்ணா ஹஜாரேவுக்கு நேரடியாகச் சென்று தனது ஆதரவைத் தெரிவிப்பது இதுவே முதல்முறை.
No comments:
Post a Comment