பொதுவாக நடிகைகள் இடையே போட்டி, பொறாமைகள் அதிகமாக இருக்கும். அதிலும் ஒரே படத்தில் இரண்டு முன்னணி நாயகிகள் சேர்ந்து நடித்தால் கேட்கவா வேண்டும். விஜய் நடிப்பில், ஜெயம் ராஜா இயக்கி விரைவில் வெளிவர இருக்கும் "வேலாயுதம்" படத்தில் தான், நடிகை ஜெனிலியாவும், ஹன்சிகா மோத்வானியும் யார் பெரியவர்கள் என்று மோதிக்கொண்டார்களாம்.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் ஜெயம் ராஜா கூறுகையில், ஜெனிலியாவுக்கும், ஹன்சிகாவுக்கும் இடையே யார் பெரியவர்? என்ற ஈகோ இருந்தது உண்மைதான். ஆனால், அதை இருவரும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள். நேரில் பார்த்தால் சிரித்துக்கொள்வார்கள். ஆனால் உள்ளுக்குள் போட்டி மனப்பான்மையை வைத்துக்கொண்டு, வெளியில் சினேகிதிகள் போல் நடிப்பார்கள். பொதுவாக 2 கதாநாயகிகள் சேர்ந்து நடிக்கும்போது இப்படிப்பட்ட சூழ்நிலைகள் உருவாவது இயல்புதான். ஜெனிலியா, ஹன்சிகா இருவரும் மும்பையை சேர்ந்தவர்கள் என்பதால், இருவருக்கும் இடையே போட்டி கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஆனால், பிரச்சினை எதுவும் இல்லை. படத்தில் இரண்டு பேருக்குமே சமமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதனால், படப்பிடிப்புக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சுமூகமாக நடந்தது.
மேலும் விஜய் குறித்து கூறும்போது, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு "எங்க வீட்டு பிள்ளை" போல், கமல்க்கு "தசாவதாரம்" போல், விஜய்க்கு "வேலாயுதம்" படம் அமையும் என்று கூறினார்.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் ஜெயம் ராஜா கூறுகையில், ஜெனிலியாவுக்கும், ஹன்சிகாவுக்கும் இடையே யார் பெரியவர்? என்ற ஈகோ இருந்தது உண்மைதான். ஆனால், அதை இருவரும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள். நேரில் பார்த்தால் சிரித்துக்கொள்வார்கள். ஆனால் உள்ளுக்குள் போட்டி மனப்பான்மையை வைத்துக்கொண்டு, வெளியில் சினேகிதிகள் போல் நடிப்பார்கள். பொதுவாக 2 கதாநாயகிகள் சேர்ந்து நடிக்கும்போது இப்படிப்பட்ட சூழ்நிலைகள் உருவாவது இயல்புதான். ஜெனிலியா, ஹன்சிகா இருவரும் மும்பையை சேர்ந்தவர்கள் என்பதால், இருவருக்கும் இடையே போட்டி கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஆனால், பிரச்சினை எதுவும் இல்லை. படத்தில் இரண்டு பேருக்குமே சமமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதனால், படப்பிடிப்புக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சுமூகமாக நடந்தது.
மேலும் விஜய் குறித்து கூறும்போது, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு "எங்க வீட்டு பிள்ளை" போல், கமல்க்கு "தசாவதாரம்" போல், விஜய்க்கு "வேலாயுதம்" படம் அமையும் என்று கூறினார்.
No comments:
Post a Comment