அட்லீ ஒரு ஹிட்லீ அனார் என்று எந்த நேரத்தில் ஷங்கர் அவர்கள் சொன்னார் தெரியவில்லை. அவரு வாய்க்கு சர்க்கரை தான் போடணும்.
கடந்த சில நாட்களாக அட்லீ விஜய்யை வைத்து ஒரு படம் பண்ணபோவதாகவும் அதை P.T செல்வக்குமார் தயாரிக்க போவதாகவும் கோடம்பாக்கத்தில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அதை உண்மை என்று நிருபிக்க வகையில் G.V பிரகாஷ் குமார் செயல் இருந்தது. G.V பிரகாஷ் குமார் அவரது ட்விட்டர் தளத்தில் அட்லியின் அடுத்த படம் ஒரு பெரிய மாஸ் ஹீரோ வைத்து பண்ண போகிறார் என தெரிந்தோ தெரியாமலோ ட்வீட் செய்து விட்டார்.
பிறகு என்ன நினைத்தரோ உடனே அந்த ட்வீட் அழித்து விட்டு திரும்பவும் இந்த விஷயம் நூறு சதவிகிதம் உண்மையானதும் நாங்களே அறிவிக்கிறோம் என்றும் இந்த படம் என்னோடைய 50வது படமாக இருக்கும் எனவும்ட்வீட் செய்து உள்ளார்.
ஏற்கனவே அட்லீ அறிமுகம் விஜய்க்கு நண்பன் படம் முலமாக கிடைத்தாலும் சமிபத்தில் அவர் சொன்ன கதையில் இம்ப்ரெஸ் ஆகிவிட்டார் என்பது கூடுதல் தகவல்,ஆக மொத்தத்தில் அட்லீ காட்டில் ஒரே அடைமழை தான்.
No comments:
Post a Comment